மகரம்
உத்திராடம்.. எச்சரிக்கை அவசியம்; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும் உள்ளனர். 1 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து, நீண்டநாள் கனவுகளை நனவாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். திருமணத் தடை விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். சொத்து, சுகம், செல்வம், செல்வாக்கோடு வாழ வைப்பார். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு 6 ம் இடத்தில் சஞ்சரித்து வாழ்வில் பிரச்னைகளை ஏற்படுத்துவார். உடல் பாதிப்பை உண்டாக்குவார். செலவுகளையும் அதிகரிப்பார். உற்சாகத்தை குறைப்பார். எதிலும் நாட்டம் இல்லாத நிலையை உருவாக்குவார். தொழிலில் பின்னடைவை ஏற்படுத்துவார். எதிரி தொல்லையை அதிகரிப்பார். மனக் கஷ்டத்தோடு பணக்கஷ்டத்தையும் உருவாக்குவார். வாழ்க்கைத் துணையுடன் இடைவெளியை உண்டாக்குவார். உறவினர்களை உங்களுக்கு எதிராக மாற்றுவார்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொதுவிதி. 1 ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 1, 3, 11 ம் இடங்களுக்கு வழங்குவதால் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். குடும்பம், தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வேலையில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 10, 12, 2 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றம் பெறும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சனி சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை, 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார் உடல்நிலையை மேம்படுத்துவார். மார்ச் 6 முதல் சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரிப்பவர், வேலைப் பளுவை அதிகரிப்பார். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியை உண்டாக்குவார். எடுக்கும் வேலைகளில் இடையூறு, அலைக்கழிப்பு, குடும்பத்தில் பிரச்னைகளை உண்டாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பாதச்சனியாக சஞ்சரிப்பவர், குடும்பத்தில் குழப்பம், வரவு செலவில் நெருக்கடியை ஏற்படுத்துவார். மிதுன குருவின் பார்வை 2ம் இடத்திற்கு உண்டாவதால் சனியால் ஏற்படும் பாதிப்பு விலகும். மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். எந்த ஒன்றையும் சாதிக்கும் பலம் ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு ராகு 3 ல், கேது 9 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் அக்கறை உண்டாகும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். புதிய சொத்து சேரும். வேண்டுதல் நிறைவேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, ராகு 2 ல், கேது 8 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இடைவெளி, பிரிவினை ஏற்படும். தவறானவர்களின் தொடர்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபாடு சிலருக்கு ஏற்படும். அவமானத்தை சந்திக்க நேரும். உடல் பாதிப்பும் மருத்துவச் செலவும் உண்டாகும்.
சூரிய சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு, மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ. 16, 2026 பிப். 13 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் நிலை உயரும். நெருக்கடி விலகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகள், அரசு பணியாளர்களின் நிலை உயரும். உடல்நிலை சீராகும்.
செவ்வாய் சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு, செப். 14 – அக். 27, 2026 பிப். 21 – ஏப். 1 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, அக். 27 – டிச. 6, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணப் பற்றாக்குறை விலகும். வியாபாரம், தொழில் லாபமடையும். வர வேண்டிய பணம் வரும். புதிய சொத்து சேரும். எடுத்த வேலைகள் நடந்தேறும். தன்னம்பிக்கை, செல்வாக்கு அதிகரிக்கும்.
பொதுப்பலன்
1 ம் பாதத்தினருக்கு குரு, ராகு, சனி சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால் நினைப்பது நடந்தேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை குரு அஸ்தமனம் அடையும் காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும் குரு நன்மை வழங்குவார். 2026 மார்ச் 6 முதல் சனியும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 4 பாதத்தினருக்கும் குருவின் பார்வைகளும் சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் சாதகத்தை உண்டாக்கும்.
தொழில்
தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். ஜுவல்லரி, உணவு தானியம், அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர், வாகன விற்பனை, உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர், சின்னத்திரை, வலைதளம், பதிப்பகம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் திறமைக்குரிய மரியாதை உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய பொறுப்புகள் கைக்கு வரும். அரசு பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு உண்டாகும். பணியில் ஏற்பட்ட வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.
பெண்கள்
குரு பகவானின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தைப் பேறு கிடைக்கும். கணவரின் அன்பால் பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உண்டாகும்.
கல்வி
படிப்பில் ஆர்வம் கூடும். பொது, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர்.
உடல்நிலை
1 ம் பாதத்தினருக்கு உடல் பாதிப்பு மருத்துவத்தால் குணமாகும். மருத்துவச் செலவு குறையும். 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நோய்கள் வெளிப்படும். சிலருக்கு விபத்தும் ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.
குடும்பம்
தம்பதி ஒற்றுமை உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்ற எண்ணம் உண்டாகும். பஇடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். சுபநிகழ்ச்சி நடக்கும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.
திருவோணம்..வளமுடன் வாழ்வீர்கள்
மனக்காரகனான சந்திரனை நட்சத்திர அதிபதியாகவும், கர்மக் காரகனான சனியை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் நினைப்பதை சாதிப்பீர்கள். பிறரின் வெற்றியை முறையை அறிந்து அதைப் பின்பற்ற முயல்வீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயங்காத நீங்கள், சாதுவாக இருந்தாலும் மனதில் உறுதி மிக்கவர். இதுவரை 5 ம் இடத்தில் சஞ்சரித்து யோகப் பலன் வழங்கிய குரு பகவான், மே 11 முதல் மறைவு ஸ்தானமான 6ம் இடத்தில் சஞ்சரித்து பலன் வழங்க உள்ளார். சுப கிரகமான குரு மறைவு பெறுவதால் சுபிட்சம் மறையும். நன்மை விலகும். ஆறாமிடத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் சோதனை ஏற்படும். உடல் பாதிப்பு உண்டாகும். முழங்கால், வயிறு, கருப்பை, மாதவிடாய்க் கோளாறு, அஜீரணம், சிறுநீரக பாதிப்பு தலை துாக்கலாம். பணவரவில் தடை உண்டாகும். நண்பர்களும் எதிரியாக மாறும் நிலை ஏற்படும். தொழிலில் முதலீடு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். கடன் தொல்லையால் மனம் கலங்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். மனம் எதையோ இழந்தது போல் எதிலும் நாட்டம் கொள்ளாது. எந்த இடத்திற்குச் சென்றாலும் போட்டியாளர்கள் உண்டாவர். தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு வரும். உறவினர், நண்பர்கள் பகையாவர். புதிய நண்பர்கள் சேர்க்கை அமையும் என்றாலும் அவர்களும் சுயநலக்காரராக இருப்பர். குறுக்கு வழியில் செல்ல எண்ணம் வரும். அதனால் அவமானம் உண்டாகும். தொழில், வேலை தொடர்பாக சிலர் வழக்குகளை சந்திக்க நேரும்.
பார்வைகளின் பலன்
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவரது பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. இக்காலத்தில் 10ம் இடமான ஜீவன ஸ்தானம், 12ம் இடமான விரய ஸ்தானம், 2 ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானங்களுக்கு குரு பார்வை உண்டாவதால், தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட சிக்கல், வழக்கு என்பதில் இருந்து விடுதலை உண்டாகும். தொழிலில் தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பட்டம், பதவி என யோகம் உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். நிலம் வாங்குதல் வீடு கட்டுதல் என வாழ்வு மேம்படும். தொழிலைப் புதுப்பிக்கும் பணி நடந்தேறும். புதிய வாகனம் அமையும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் பாதிப்பு ஏற்படும். பொன், பொருளை விற்று சுபநிகழ்ச்சி நடத்தும் நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்தால்தான் வாழ்க்கை நடந்தேறும். படுக்கை அறையில் நிம்மதி இருக்கும். அரசு விவகாரத்தில் இக்காலத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமணம் நடத்தும் யோகம் உண்டாகும். சிலர் சொந்தமாக வீடு கட்டி அதில் குடியேறுவர்.
சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை பாதச்சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், பொருளாதார நெருக்கடி, நட்புகளிடையே பகை, குடும்பத்தில் பிரச்னை, எதிர்பார்ப்பில் இழுபறிகளை ஏற்படுத்துவார் மிதுன குருவின் பார்வை சனிக்கு உண்டாவதால் சனியால் ஏற்படும் பாதிப்பு நெருங்காமல் போகும். 2026 மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ஏழரை ஆண்டாக இருந்த நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பார். மனதில் தைரியம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செல்வாக்கு உயரும்.
ராகு, கேது சஞ்சாரம்
இக்காலத்தில் ராகு 2 ம் இடத்தில் சஞ்சரிப்பதால், வரவு செலவில் நெருக்கடி ஏற்படும். குடும்பத்தில் பிரச்னைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இடைவெளி, பிரிவினை ஏற்படும். மிதுன குருவின் பார்வை ராகுவிற்கு உண்டாவதால் பாதிப்பு நெருங்காது. 8 ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு, வியாபாரம், தொழில், வேலையில் பிரச்னை, அவமானம், சட்டச் சிக்கல்கள், வழக்கு, விபத்து, நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
சூரிய சஞ்சாரம்
ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களில் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்தது நடந்தேறும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும்.
செவ்வாய் சஞ்சாரம்
அக். 27 – டிச. 6, 2026 ஏப். 1 – மே 26 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருட்கள் சேரும். செல்வாக்கு உயரும்.
பொதுப்பலன்
குரு பகவான் தன் பார்வைகளாலும், ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை அஸ்தமன காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் போதும் நன்மையை உண்டாக்குவார். 2026 மார்ச் 6 முதல் சனியும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் உங்களைப் பாதுகாக்கும்.
தொழில்
ஜீவன ஸ்தானத்திற்கும், தன ஸ்தானத்திற்கும் குருபார்வைகள் கிடைப்பதால் தொழில் வளர்ச்சி அடையும். லாபம் உண்டாகும். பேக்டரி, வாகன உற்பத்தி, உதிரிபாக உற்பத்தி, வாகன விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஜினியரிங், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஆடை ஆபரணம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், வேளாண்மை, வேளாண்மைச் சார்ந்த தொழில்கள் அதிக லாபம் தரும்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் நிர்வாகம், சக ஊழியர்களை அனுசரிப்பது அவசியம். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக செயல்படுவர் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அரசு பணியாளர்களுக்கு மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். மெமோ, வழக்கு என சந்திக்க நேரிடும். உங்களுக்கும் கீழானவர்களால் அவமானம் ஏற்பட வாய்ப்புண்டு.
பெண்கள்
மறைவு ஸ்தானங்களில் குரு, கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. கருப்பைக் கோளாறு, அல்சர், அஜீரணக் கோளாறு சிலருக்கு ஏற்படும். மாங்கல்ய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் கணவரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். உங்களை அவமானப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடலாம் என்பதால் எதிர்பாலினரிடம் இருந்து விலகி இருங்கள். வேலை பார்க்கும் இடத்தில் கவனக்குறைவிற்கு இடம் கொடுக்காமலும், ஆசைக்கு ஆட்படாமலும் இருப்பது மிக அவசியம். எந்த ஒன்றாக இருந்தாலும் கணவரிடம் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது. குருபார்வையால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
கல்வி
வாக்கு ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் படிப்பில் அக்கறை உண்டாகும். பொது, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை
அஷ்டம ஸ்தானத்தில் கேது, ஆறாமிடத்தில் குரு சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும், வாகன விபத்து, தீ விபத்து சிலருக்கு ஏற்படும். மறைந்திருந்த தொற்றுநோய் வெளிப்படும். அஜீரணம், அல்சர், ஒவ்வாமை, மூச்சுத்திணறல் என மருத்துவச் செலவு ஏற்படும். மருத்துவம் செய்தும் பலனில்லை என்ற நிலையும் சிலருக்கு வரலாம்.
குடும்பம்
குடும்ப ஸ்தானத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் தம்பதிக்குள் பிரச்னை விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை தேவை. புதிய இடம் வாங்கும் போது சட்ட சிக்கல்களை ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
பரிகாரம்; பைரவரை வழிபட பயம் போகும். நன்மை உண்டாகும்.
அவிட்டம்.. குருபார்வையால் நன்மை!
தைரிய வீரிய பராக்கிரமக்காரனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாகக் கொண்டிருந்தாலும், 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மகரம் ராசியாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கும்பம் ராசியாகும். இரண்டு ராசியினருக்கும் கர்மக் காரகனான சனி பகவானே ராசிநாதன் என்பதால், சனி, செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். நீங்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திராத மாற்றம் வாழ்வில் ஏற்படும். திடீரென கற்பனைக்கு அப்பாற்பட்ட இடத்திலும் கோலோச்சுவீர்கள். திடீரென முற்றும் துறந்த நிலைக்கும் மாறி விடுவீர்கள். சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் கர்ம வினைகளுடன் பிறந்தவர்கள் என்பதால் காலத்தின் போக்கில் செல்லக் கூடியவர்களாக உங்களில் பலர் இருப்பர். 1,2 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் குரு பகவான் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து, எதிர்ப்புகளை அதிகரிப்பார். எங்கும் போட்டி எதிலும் பிரச்னை என்ற நிலையை உருவாக்குவார். நன்றாகப் பழகி வந்தவர்களும் விலகிச் செல்லக்கூடிய அளவிற்கு பகையை ஏற்படுத்துவார். உடல் பாதிப்புகளை அதிகரிப்பார். வம்பு, வழக்குகள் என சங்கடப்படுத்துவார். மனதில் நிம்மதி இல்லாத நிலையை உருவாக்குவார். 3, 4 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிப்பவர், இதுவரை இருந்த நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். உங்களுக்கு லாபாதிபதியும், குடும்பாதிபதியுமான குருபகவான் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் திருமணம் நடந்தேறும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும். புதிய நட்பு உருவாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குழந்தைகளைப் பற்றிய சிந்தனை உண்டாகும். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் இனி மாறும். கோயில் கோயிலாகச் சென்று வருவீர்கள். உங்கள் வாழ்வில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும்.
பார்வைகளின் பலன்
தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை குரு உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. இக்காலத்தில் 1,2 ம் பாதத்தினருக்கு, தன் 5,7,9 ம் பார்வைகளை 10, 12, 2 ம் இடங்களுக்கு வழங்குவதால், தொழில் முன்னேற்றம் பெறும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். விரயச் செலவு அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என வாங்குவதால் கையிருப்பு கரையும். நிம்மதியான உறக்கம், மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். 3, 4 ம் பாதத்தினருக்கு, 9, 11, உங்கள் ராசியை குரு பார்ப்பதால், தெய்வ அருள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். நீண்டநாளாக எண்ணியிருந்த கோயில்களுக்கு செல்வீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். முடங்கிய தொழில்களை மீண்டும் கையில் எடுப்பீர்கள். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவடைவீர்கள்.
சனி சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், குடும்பத்திற்குள் குழப்பம், பண வரவில் தடை, வார்த்தைகளால் சங்கடத்தை ஏற்படுத்துவார் என்றாலும் மிதுன குருவின் பார்வையால் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். மனதில் தைரியத்தை அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். 3, 4 ம் பாதத்தினருக்கு, ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர், எழ முடியாத அளவிற்கு உங்களைக் கட்டிப் போடுவார். நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். தொழிலை முடக்குவார். நண்பரிடம் இருந்து பிரிப்பார். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம். மிதுன குருவின் பார்வையால் இவற்றில் எல்லாம் மாற்றம் ஏற்படும். 2026 மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர் நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்
1, 2 ம் பாதத்தினருக்கு, ராகு 2 ம் இடத்தில் சஞ்சரிப்பதால், நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். வரவு, செலவில் நெருக்கடி ஏற்படும். கணவன், மனைவிக்குள் இடைவெளி ஏற்படும். ஆனாலும் மிதுன குருவின் பார்வை ராகுவிற்கு உண்டாவதால் பாதிப்பு குறையும். 8 ம் இட கேதுவால் குறுக்கு வழியில் மனம் செல்லும். அதனால் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். நோய் நொடி வரலாம். வியாபாரம், தொழில், வேலையில் பிரச்னை, அவமானம், வழக்குகள் ஏற்படும். 3, 4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். சிலருக்கு அலைச்சலை ஏற்படுத்துவார். வருமானத்தை தேட வைப்பார். மிதுன குரு உங்கள் கவுரவத்தை பாதுகாப்பார். நல்லவர்களுடன் சேர வைப்பார். 7 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது கணவன், மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்துவார். கூட்டுத்தொழிலில் பிளவை உண்டாக்குவார்.
சூரிய சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, நவ. 17 – 2026 ஜன 14 காலங்களிலும் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். வழக்குகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். கடல் கடந்து வேலைக்காக செல்லும் வாய்ப்பு வரும். நினைத்தது நடந்தேறும். உடல்நிலை சீராகும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும்.
செவ்வாய் சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு, அக். 27 – டிச. 6, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, டிச. 6 – 2026 ஜன. 14 காலத்திலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும்.
பொதுப்பலன்
1,2 ம் பாதத்தினருக்கு, குரு பகவான் தன் பார்வைகளாலும், ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை அஸ்தமன காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் போதும் நன்மைகளை உண்டாக்குவார். 2026 மார்ச் 6 முதல் சனியும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 3,4 ம் பாதத்தினருக்கு 5 ம் இட குருவும், அவருடைய பார்வைகளும் சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் யோகப்பலன்களை வழங்கும்.
தொழில்
தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேளாண்மை, ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும்.
பணியாளர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். மேல் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சிப்பதுடன் கடல் கடந்தும் வேலைக்காக செல்வீர்கள்.
பெண்கள்
குருவின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.
கல்வி
இக்காலத்தில் குருபார்வை சாதகமாக இருப்பதால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொது, போட்டித் தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். ஒரு சிலர் படிப்பிற்காக கடல் கடந்தும் செல்வீர்கள்.
உடல்நிலை
1,2 ம் பாதத்தினருக்கு, அஷ்டம கேதுவும், ஆறாமிட குருவும் நோய்களை உண்டாக்குவர். வாகன விபத்து, தீ விபத்து என ஒரு சிலருக்கு ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.
குடும்பம்
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதிகளுக்கு ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் மீது அக்கறை கூடும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடங்கள் நீங்கும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.