தமிழக போலீஸ் துறையில் மொத்தம் 13,406 போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பணியில் உள்ள போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
போலீஸ் துறைக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் டி.பி.எஸ்., (தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ்) அதிகாரிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழக போலீஸ் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் எஸ்.ஐ., முதல் கான்ஸ்டபிள் வரை தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதில் உடல் தகுதி, எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஸ்டேஷன், ஆயுதப்படை, பட்டாலியன் படைக்கு நியமிக்கப்படுகின்றனர்.
தற்போது தமிழகத்தில் 14 டி.ஜி.பி.,க்கள் உள்ளனர். ஏ.டி.ஜி.பி.,க்கள் 17 பேர் உள்ளனர். உயர்அதிகாரிகள் பணியிடங்கள் பெரும்பாலும் உடனுக்குஉடன் நிரப்பப்படுகின்றன. அதேசமயம் எஸ்.ஐ., முதல் கான்ஸ்டபிள் வரையிலான பணியிடங்கள் ஆண்டுதோறும் பற்றாக்குறையாகவே உள்ளன.
2021 ஜூலை கணக்கெடுப்பின்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணியில் உள்ள போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமையும், மனஅழுத்தமும் ஏற்படுகிறது.வாரவிடுமுறை எடுக்க போலீசாருக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு அனுமதித்துள்ள நிலையில், ஆள் பற்றாக்குறையால் விடுமுறை எடுக்க அனுமதிப்பதே இல்லை என்பதே உண்மை. போலீசார் நலன்கருதி உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.