1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

படுக்கையை பிறர் மிதிக்காமல் மடித்துவைக்க வேண்டும்..! ஏன் தெரியுமா..?*

🙏💱 *படுக்கையை பிறர் மிதிக்காமல் மடித்துவைக்க வேண்டும்..! ஏன் தெரியுமா..?* 💚❤️

அந்தக் காலத்தில் படுப்பதற்கென்று தனியாக பெட்ரூம் கிடையாது. அனைவரும் சேர்ந்து ஒரே இடத்தில் படுத்திருப்பார்கள். ஒருவர் ஒரு இடத்தில் தொடர்ந்து அதிக நேரம் இருக்கும்போது, அந்த இடத்தில், அவருடைய ஒளி உடலின் தன்மை எஞ்சியிருக்கும். காட்டு விலங்குகளுக்குக் கூட இதை உணரும் சக்தி நன்கு இருக்கிறது. ஒரு மனிதன் ஒரு இடத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு பின் சென்று விட்டாலும், அங்கு வரும் விலங்குகள், இங்கு ஒரு மனிதன் சிறிது நேரத்திற்கு முன்னால் இருந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்கின்றன. இதை வாசனை மூலம் மட்டும் அவை அறியவில்லை. அங்கிருக்கும் அதிர்வுகள் வைத்தும் அவை தெரிந்து கொள்கின்றன.


சூட்சுமமாக இருக்கும் ஒரு மனிதன்கூட இப்படி அறிந்து கொள்ளமுடியும். எனவே படுக்கையில் ஒருவர் தொடர்ந்து 6 அல்லது 7 மணி நேரம் தொடர்ந்து இருப்பதால், படுக்கையிலிருந்து எழுந்த பின்னரும், அவருடைய ஒளி உடலின் தன்மை அந்தப் படுக்கையில் இருக்கும். படுக்கையும், போர்வையும் மடித்து வைக்காமல் இருக்கும்போது, படுக்கையை 10 பேர் மிதித்துக் கொண்டு போவார்கள்.

இந்த நிலையில், அதே படுக்கையில் அவர் அன்றிரவு படுப்பது, நிச்சயமாக அவருடைய ஆரோக்கியத்திற்கும், மன நலனுக்கும் நல்லதில்லை. மேலும் அவருடைய உடலும், அந்தப் படுக்கைக்கு, அந்த சூழ்நிலையில், அவ்வளவு எளிதில் ஒத்துப்போகாது. இன்னொரு உதாரணம் மூலமும் இதை விளக்க முடியும். நீங்கள் ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறீர்கள். எல்லாம் வசதியாகவே இருக்கின்றன. நீங்களும் களைப்பாகத்தான் இருப்பீர்கள். இருந்தாலும் படுத்தால் தூக்கம் வராது. ஏனெனில் உங்கள் ஒளி உடலுக்கு அங்கிருக்கும் தன்மையுடன் ஒத்து வரவில்லையென்றால் உங்கள் உடல் அங்கு சுகமாகவே இருக்காது. தேவையற்ற கனவுகளும் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்க வாய்ப்புண்டு.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags