1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

'34 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்'--அமைச்சர் மகேஷ்

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - பால் மனோஜ் பாண்டியன்: ஆலங்குளம் தொகுதி, காவூர் உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இதற்காக, அரசுக்கு ௨ லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. இப்பள்ளியில் இருந்து, 8 கிலோ மீட்டர்தொலைவில் தான், மேல்நிலை பள்ளி உள்ளது. சுற்றுப்புற கிராம மாணவர்கள் பயன் பெற, இப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்.இந்த ஆண்டு எத்தனைபள்ளிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது?



அமைச்சர் மகேஷ்: உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, பத்தாம்வகுப்பில் குறைந்தது, 100 மாணவர்கள் இருக்க வேண்டும். ஒரு மேல்நிலை பள்ளிக்கும், மற்றொரு மேல்நிலை பள்ளிக்கும் இடையே, குறைந்தது8 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பொதுமக்கள் பங்களிப்பாக, ௨ லட்சம்ரூபாய் செலுத்த வேண்டும். மாநகராட்சியாக இருந்தால், ஆறு கிரவுண்ட்; மாவட்டத் தலைநகரமாக இருந்தால், எட்டு கிரவுண்ட்; நகராட்சியாக இருந்தால், 10 கிரவுண்ட், பேரூராட்சியாக இருந்தால் 1 ஏக்கர்,ஊராட்சியாக இருந்தால், 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.காவூர் அரசு உயர்நிலை பள்ளி சார்பில், பணம் செலுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில், 29 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். எனவே, நெறிமுறைகளை இப்பள்ளி பூர்த்தி செய்யாததால், தற்போது இயலாது.

பால் மனோஜ் பாண்டியன்: பாப்பான்குளம் உட்பட பல்வேறு கிராமங்கள் பயன் பெறும் வகையில், இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டால், அப்பகுதி மாணவர்கள் பயனடைவர். இந்த ஆண்டு அமைச்சர் பரிசீலிப்பாரா?அமைச்சர் மகேஷ்: முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு, 12 தொடக்க பள்ளிகள், 22 மற்ற பள்ளிகள், தரம் உயர்த்தப்பட உள்ளன. நெறிமுறைகளை பூர்த்தி செய்யும் பள்ளிகள், படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags