''அக்., 1ல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், அக்., 1ல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் முடிவு எடுப்பார்.
இது குறித்து, சுகாதாரம், வருவாய் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஒருங்கிணைந்து, முதல்வர் தலைமையில் நடக்கும், உயர்மட்ட குழு கூட்டத்தில் தான் முடிவுகள் மேற்கொள்ள இயலும்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், 14474 என்ற ஹெல்ப் லைன் உள்ளது. இந்த எண்ணில், பாடத்தில் சந்தேகம் உள்ள மாணவர்களுக்கு, காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை விளக்கம் அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.