1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

10,906 போலீசாருக்கு போலீஸ் வேலை சீருடை தேர்வு குழுமம் அறிவிப்பு

 

10,906 போலீசாருக்கு போலீஸ் வேலை சீருடை தேர்வு குழுமம் அறிவிப்பு


தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்கள், 10 ஆயிரத்து, 906 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களின் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு, காவல் துறையில், மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு, ஆண்கள், 685; பெண்கள் மற்றும் திருநங்கைகள், 3,099 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம்அத்துடன், சிறப்பு காவல் படை பிரிவுக்கு, 6,545; சிறைத்துறைக்கு, ஏழு பெண்கள், 112 ஆண்கள் என, 119; தீயணைப்பு துறைக்கு, 458 ஆண்கள் என, 10 ஆயிரத்து, 906 இரண்டாம் நிலை காவலர் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை, சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம், நேற்று வெளியிட்டுள்ளது. www.tnusrbonline.org என்ற, இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்ப பதிவேற்றம், வரும், 29ல் துவங்குகிறது; அக்., 26க்குள், விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவேற்றம்அதற்கு பின், பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

எழுத்து தேர்வு, 37 மாவட்ட தேர்வு மையங்களில், டிச., 13ல் நடக்கிறது.மேலும், விண்ணப்பம் எப்படி சமர்பிக்க வேண்டும்; இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்; உடல் தகுதி தேர்வு, உடற்கூறு அளத்தல்; சான்றிதழ் சரிபார்த்தல் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், www.tnusrbonline.org என்ற இணையதளத்தில், தகவல் சிற்றோடாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதை பதிவிறக்கம் செய்து, நன்கு படித்து பார்த்த பின், விண்ணப்பிக்க வேண்டும். தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என, சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags