கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி வருவது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 51 ஆசிரியர்களுக்கும், 4 மாணவர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கணக்கெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கரோனா பாதித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பள்ளிகள் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.