1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சளி, இருமல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

சளி, இருமல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்


சளி, இருமல் இருந்தால் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டன.


தனிமனித் இடைவெளியைக் கடைப்பிடித்து வகுப்புக்கு 25 மாணவ, மாணவியரும், முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்தும் பள்ளிகள் இயங்க ஆரம்பித்துள்ளன. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே சேலம் மாவட்டம், பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்து வரும் மாணவிக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், குழந்தைகளுக்கு சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளின் உடல் நலனில் முழுத் திருப்தியும் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்பலாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags