1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஒட்டகங்கள் - சில வியத்தகு உண்மைகள்..!!

ஒட்டகங்கள் - சில வியத்தகு உண்மைகள்..!!

ஒட்டகம் குட்டி போட்டு பாலூட்டும் ஒரு பாலூட்டிவிலங்கு ஆகும் . இது பாலைவனங்களில் அதிகம் வாழக்கூடிய விலங்காகும்.


நீரில்லாமல் பல வாரங்கள் வாழக் கூடியது. பொதுவாக 4 முதல் 5 வாரங்கள் வரை நீர் அருந்தாமல் பாலைவனத்தில் வாழக்கூடியது. மேய்வதற்கு புல் கிடைத்து விட்டால் 10 மாதங்கள் வரை நீர் அருந்தாமல் வாழக் கூடியது. 

தன் உடல் வெப்ப நிலையை காலநிலைக்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ள வல்லது. அதாவது 34 டிகிரி முதல் 41 டிகிரி வரை உடல் வெப்ப நிலையை சரி செய்து கொள்ளும். நீர்ச்சத்து வற்றிப் போகாமல் இருப்பதற்காக ஒட்டகங்கள் வியர்வையை வெளியிடுவதில்லை.

நீர் கிடைக்கவில்லை என்றால் தனது சிறுநீரை வெளியிடுவதை குறைத்துக் கொள்ளும்.

200 கிலோ எடையை சுமந்து கொண்டு ஒரே நாளில் 50 கிலோமீட்டர் தொடர்ந்து நடக்கும் வல்லமை கொண்டது ‌.

அதிகபட்சமாக மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது இவற்றால் சராசரியாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து ஓட முடியும்.

இதனுடைய கால்கள் பாலைவனத்தில் நடந்து செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. குடிக்கும் நீரில் பகுதியை உடலில் தேக்கி வைக்கும் வல்லமை கொண்டது. 

தண்ணீர் குடிக்கும் போது தண்ணீரில் குறிப்பிட்ட பகுதியை ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் ஆக மாற்றி வைத்துக் கொள்ளும். இதனால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் உண்மையான அளவை விட 200 மடங்கு அதிகமாக்கி வைத்துக்கொள்ளும். தேவைப்படும் போது அதை வைத்து சரிசெய்து கொள்ளும். 

தன் உடலில் 40 சதவீதம் தண்ணீர் குறைந்தாலும் ஓட்டத்தால் வாழ முடியும். பாலைவன சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருக்க கண்களில் அதிகமான நீரை சுரந்து கண்கள் காய்ந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளும்.

பாலைவனப் புயல் ஏற்படும் போது தூசிகளின் பாதிப்பில் இருந்து கண்களையும், மூக்கையும், பாதுகாத்துக்கொள்ள இயற்கையாகவே இறைவன் அதன் மேல் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளான்.

ஏற்கனவே உடலில் சேர்த்து வைத்த தண்ணீர் குறைந்து விட்டால், தன் மூக்கால் மோப்பம் விட்டு தண்ணீர் இருக்குமிடம் அறிந்து கொண்டு, அந்த இடத்தை சென்றடைந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags