1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மாணவர்கள் வருகை: பள்ளிகளுக்கு தடை

மாணவர்கள் வருகை: பள்ளிகளுக்கு தடை


'செய்முறை தேர்வு இல்லாத பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வு வரை பள்ளிக்கு வர வேண்டாம்' என பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு துவங்கியது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே பள்ளிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன் விபரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடக்கும் நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் அதற்கான நேரத்தில் பள்ளிகளுக்கு வர வேண்டும்.

அதேநேரம் செய்முறை தேர்வு இல்லாத மாணவர்கள் மே 5ம் தேதி தேர்வு துவங்கும் வரையில் பள்ளிகளுக்கு வரவேண்டாம். அவர்களுக்கு தேர்வுக்கு ஆயத்தமாக தான் விடுமுறை விடப் படுகிறது. தங்களுக்கான அனைத்து பாட செய்முறை தேர்வுகளையும் முடிக்கும் மாணவர்களும் மே 5 தேர்வு நாள் வரை பள்ளிகளுக்கு வர வேண்டாம். வீட்டில் இருந்தவாறு தேர்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags