1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பெண் அதிகாரியின் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றால் கல்வித்துறை அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியத்தில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக பணியாற்றிய புனிதவதி என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக மாற்றம் செய்யப்பட்டார். தன்னை பதவி இறக்கம் செய்ததை எதிர்த்து புனிதவதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து அவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர், 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

பணி வரன்முறை

புனிதவதி தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அவரது கோரிக்கையை பரிசீலிக்க கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு புனிதவதி ஓய்வுபெற்றார்.

இதையடுத்து 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தன்னுடைய பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று தொடக்கக்கல்வி ஆணையர், அரியலூர் தலைமை கல்வி அதிகாரி ஆகியோரிடம் அவர் மனு கொடுத்தார்.

அந்த மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்காததால், ஐகோர்ட்டில் புனிதவதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.

சிறை

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் கொடுத்த மனுவை பரிசீலித்து 90 நாட்களில் உரிய உத்தரவை தொடக்கக் கல்வி ஆணையர், அரியலூர் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி ஆகியோர் பிறப்பிக்க வேண்டும்.

ஒருவேளை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்’ என்று எச்சரித்து உத்தரவிட்டுள்ளார்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags