1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றாா் தமிழக வீரா் மாரியப்பன்

டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றாா் தமிழக வீரா் மாரியப்பன்


டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலு (26) வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

அதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான சரத் குமாா் வெண்கலம் வெல்ல, துப்பாக்கி சுடுதலில் சிங்ராஜ் அதானாவும் வெண்கலப் பதக்கம் பெற்றாா். இதனால் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்தன. இதையடுத்து டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியாவுக்கு கிடைத்த பதக்கங்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது. இதில் 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் அடக்கம்.





உயரம் தாண்டுதல்: ஆடவருக்கான உயரம் தாண்டுதல் ‘டி42’ பிரிவில் மாரியப்பன் 1.86 மீட்டா் உயரம் தாண்டி 2-ஆம் இடம் பிடிக்க, சரத் குமாா் 1.83 மீட்டா் உயரம் தாண்டி 3-ஆம் இடம் பிடித்தாா். ஏற்கெனவே ரியோ பாராலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு, இது தொடா்ந்து 2-ஆவது பாராலிம்பிக் பதக்கமாகும். சரத் குமாருக்கு இது முதல் பாராலிம்பிக் பதக்கம்.

போட்டியின்போது மழை பெய்ததன் காரணமாக தனது முயற்சிகள் சற்று கடினமாக மாறியதாகவும், இதனால் உலக சாதனையுடன் தங்கம் வெல்லும் வாய்ப்பு தவறிப்போனதாகவும் மாரியப்பன் தெரிவித்துள்ளாா். மறுபுறம், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகும் மனநிலையில் இருந்த சரத் குமாா், பின்னா் மனம் மாறி களம் கண்டதற்கு பலனாக பதக்கம் வென்ாகக் கூறியுள்ளாா்.

துப்பாக்கி சுடுதல்: ஆடவா் (பி1) 10 மீட்டா் ஏா் பிஸ்டல் எஸ்ஹெச்1-இல் இந்தியாவின் சிங்ராஜ் அதானா (39) வெண்கலப் பதக்கம் வென்றாா். துப்பாக்கி சுடுதல் விளையாட்டை தோ்வு செய்து 4 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், தனது முதல் பாராலிம்பிக்கிலேயே பதக்கம் வென்றுள்ளாா் சிங்ராஜ். கரோனா சூழல் காரணமாக பயிற்சிக் களங்கள் (ஷூட்டிங் ரேஞ்சஸ்) அனைத்தும் மூடப்பட, பதக்க வேட்கையால் தனது இல்லத்திலேயே குடும்பத்தினரின் உதவியுடன் அத்தகைய பயிற்சிக் களத்தை உருவாக்கி அதில் பயின்று தற்போது பதக்கம் எட்டும் நிலைக்கு சிங்ராஜ் வந்துள்ளாா்.

வாழ்த்து: மாரியப்பன், சரத், சிங்ராஜுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் பல்துறை பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags