கொரோனா தொற்று காரணமாக அனைத்து கல்லூரி படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர, மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதற்கான மதிப்பெண்ணும் வழங்கும் பணி முடிந்து, தேர்வு முடிவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் வருகிற 15-ந் தேதி முதல் நடத்தப்பட வேண்டும் என்று உயர் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை நடத்துவது தொடர்பாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
அதில் தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும், அடுத்த மாதம் 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.