1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

உடல் ஆரோக்கியத்தை, அழகை மேம்படுத்தும் 'வெந்நீர்'

 

Is it good to drink hot water after eating

தற்போதைய காலகட்டத்தில் சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதிகம்பேர் இருக்கின்றனர். எந்த ஒரு தட்பவெப்பநிலையாக இருந்தாலும் பிரிட்ஜில் இருந்து 'ஜில்' என இருக்கும் தண்ணீரை அப்படியே அருந்துகின்றனர். ஆனால், இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால், நம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் பொருள்கள் திடப்பொருளாக மாறி, செரிமானத்தை தடுக்கும். உணவு வயிற்றிலேயே தங்குவதால் சிலருக்கு செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகள்கூட ஏற்படலாம். மேலும், உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். 

அதேநேரத்தில் சூடான/வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. எனவே, உணவிற்குப்பின் சில நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது. 

இதனால் உணவு எளிதாக செரிமானம் அடையும். அசைவ உணவுகள், திட உணவுகள் அதிகம் சாப்பிட்டிருந்தாலும் செரிமானப் பிரச்னை ஏற்படாது. 

பொதுவாகவே நாள் முழுவதும் சுடுதண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறைவதோடு உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

தொண்டை மற்றும் உணவுப் பாதையில் உள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றும். நரம்பு மண்டலத்தை சுத்திகரிக்கும். 

சூடான நீரை குடிக்க முடியாதவர்கள் காய்ச்சிய நீரை பருகலாம். சூடான/ காய்ச்சிய நீரை பருகுவதால் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். வயிற்றுப்போக்கு, வாதம், பித்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்னைகள் சரியாகும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

உடல் பருமன் உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் சூடான தண்ணீரை குடிப்பதனால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். இது உடல் எடையை குறைக்க உதவும். வயதான தோற்றத்தைத் தவிர்க்கும். மேலும் முகம் பொலிவு பெறும். 

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags