1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

நேர்மறை சிந்தனை கொண்டவராக இருந்தால்.



நேர்மறை சிந்தனை கொண்டவராக இருந்தால். 



நேர்மறை சிந்தனை கொண்டவராக இருந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

உளவியல் அறிவியல்(Psychological Science) இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஒருவர் வாழ்வில் நேர்மறை எண்ணம் அதிகம் கொண்டிருந்தால் அவர் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். மேலும், இந்த நேர்மறை சிந்தனை எதிர்காலத்தில் சிறந்த நினைவாற்றலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயதாகும்போது பலர் மறதியால் மிகவும் அவதிப்படும் சூழலில் இளம் வயதில் இருந்து நேர்மறை சிந்தனையோடு இருந்தால் வயதான காலத்தில் மறதியைத்  தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஆய்வில் நடுத்தர வயது மற்றும் மூத்தவர்கள் உள்பட 991 பேர் பங்கேற்றனர். 1995 -1996, 2004 -2006 மற்றும் 2013 -2014 ஆகிய மூன்று கால இடைவெளியில் இதுகுறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. 

ஒவ்வொரு மதிப்பீட்டிலும் பங்கேற்பாளர்கள் கடந்த 30 நாள்களில் தாங்கள் அனுபவித்த பல நேர்மறையான உணர்ச்சிகளைப் பற்றி தகவல் அளித்தனர். அவர்களின் நினைவுத்திறன் குறித்தும் சோதனை செய்யப்பட்டது. அதேபோன்று வயது, பாலினம், கல்வி, மனச்சோர்வு, எதிர்மறை பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆய்வு செய்தனர்.

'வயதுக்கு ஏற்ப நினைவுத்திறன் குறைந்துவிட்டது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன' என வடமேற்கு பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், ஆய்வறிக்கையில் மூத்த எழுத்தாளருமான கிளாடியா ஹேஸ் கூறினார்.

'இருப்பினும், அதிக அளவு நேர்மறையான தாக்கம் கொண்ட நபர்கள் நினைவுத்திறன் பாதிப்பு குறைவாகவே இருந்தது' என வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டதாரி மற்றும் ஆய்வின் முதன்மை ஆசிரியரான எமிலி ஹிட்னர் கூறினார்.

மேலும் இதுகுறித்த எதிர்கால ஆராய்ச்சிகள் உடல் ஆரோக்கியம், சமூக உறவுகள் போன்ற நேர்மறையான தாக்கத்தையும், நினைவுத்திறனையும் இணைக்கக்கூடிய தொடர்பைக் கண்டறியலாம் என்றும் கூறுகின்றனர்

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags