10, 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன.2019-20 கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள், கரோனா காலத்தில் நடத்தப்பட்ட தேர்வை எழுத முடியாதவர்களுக்கு சமீபத்தில் துணைத்தேர்வு நடத்தப்பட்டது.
இதில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான http://tnresults.nic.in/, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு மாணவர்கள் வருகிற நவம்பர் 3, 4 ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) வெளியாகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.