1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தெரிந்து கொள்வோம் வாங்க... மருத்துவப் பழமொழிகள்....

தெரிந்து கொள்வோம் வாங்க...

மருத்துவப் பழமொழிகள்....



நம் முன்னோர் கூறிய முதுமொழிகளை "பழமொழிகள்' என்றும் கூறுவர். அக்காலத்தில் வாய்மொழியாகச் சொல்லிவந்த பழமொழிகள் பல மனிதர்களின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் வித்திடுகின்றன. அன்றாடம் நாம் உண்ணும் உணவே மருந்தாகப் பயன்படுகிறது என்பதைக் 
 கீழ்வரும் பழமொழிகள் கூறுகின்றன:




1) "கோழைக்கு எதிர் தூதுவளை
 நம் குடும்பத்தின் தெய்வம் துளசி இலை'

 2)  "வாதத்தை அடக்கும் முடக்கத்தான்
 நல்வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்'

 3) "கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி'
 மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி'

4)  "குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி
 சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை'

 5)  "கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு'

6) "அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்'

7)  "காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை'

9)  "ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை'

10)  "தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை'

11) "வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை'

12) "கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே'

13)  "நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்
 விஞ்சு வாதத்தின் விளைவு போம்'

15) "நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்'

16) "விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை'

17)  "விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்'

18)  "ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்'

19)  "வில்வம் பித்தம் தீர்க்கும்'

20)  "காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய்'

21)  "அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு'

- இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் நோய்களையும் மருத்துவரிடம் சொல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்பு கின்றன இப் பழமொழிகள்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags