வாட்ஸ்ஆப் செயலியை உபயோகிப்பவர்களுக்கு, புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவர்கள், தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்தாக வேண்டும்.
அப்படி ஒப்புதல் அளிக்காதபட்சத்தில், வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது. பிப்ரவரி, 8ம் தேதிக்குள், வாட்ஸ் ஆப் அறிவிக்கும் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பும், நம் தகவல்களை, வாட்ஸ்ஆப், பேஸ்புக்குக்கு பகிர்ந்து வந்த போதிலும், அது நம் ஒப்புதல் இருந்தால் மட்டுமே பகிரப்பட்டது. ஆனால், இப்போது நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நம் தனிப்பட்ட தொலைபேசி எண், நம்முடன் தொடர்பில் இருப்பவர்களின் எண்கள், நம் இருப்பிடம் உள்ளிட்ட பல தகவல்களை பேஸ்புக் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியே ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிப்ரவரி, 8ம் தேதிக்குப் பிறகு வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியாது.
வாட்ஸ்ஆப்பின் இந்த நிர்ப்பந்தத்தை பலர் விரும்பவில்லை. இந்நிலையில், வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக பல செயலிகள் முன்னிறுத்தப்படுகின்றன.
'சிக்னல்', 'டெலிகிராம்' உள்ளிட்ட செயலிகளை பலர் பரிந்துரைக்கிறார்கள். இவையும் வாட்ஸ்ஆப் செயலியில் இருக்கும் அதே வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. பிரபல, 'டெஸ்லா' நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், 'சிக்னல்' செயலியை பயன்படுத்துமாறு பரிந்துரைத்து உள்ளார்.
இதேபோல் பல நிபுணர்களும், வாட்ஸ்ஆப் செயலியை விட, பலமடங்கு பாதுகாப்பு அம்சங்களும், வசதியும் கொண்டது, 'சிக்னல்' என்கிறார்கள்.
'சிக்னல்' செயலியை அடுத்து அதிகம் பரிந்துரைக்கப்படுவது, 'டெலிகிராம் '. கிட்டத்தட்ட 20 கோடி பேருக்கும் மேல் இதை பயன்படுத்துகிறார்கள். முதலில், ஐ.ஓ.எஸ்., தளத்துக்கு மட்டும் அறிமுகமானது.
அதன் பிறகு, ஆண்ட்ராய்டு தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவும் பாதுகாப்பான, வேகமான, இலவச செயலியாகும். பணம் செலுத்தி பயன்படுத்தும் செயலிகள், 'ஒயர்', 'த்ரீமா' ஆகிய செயலிகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
வாட்ஸ்ஆப் வேண்டாம் என நினைப்பவர்கள் இந்த செயலிகளை முயற்சிக்கலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.