புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த சூழலில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் உட்பட கல்விநிலையங்கள் மட்டும் மீண்டும் திறக்க பல்வேறு கட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, பெற்றொரின் ஒப்புதலுடன் மாணவர்கள் விருப்பத்துடன் பள்ளிக்கு வரலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் முதற்கட்டமாக 9,10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் தீர்ப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளது. 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தின் 3 நாட்களும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 நாட்களும் வகுப்புகள் நடைபெறும். மேலும் பள்ளி திறப்பு நேரமானது காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் தீர்ப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளது. வகுப்புகளுக்கு பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்றுவரும் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வருகை பதிவு கிடையாது. அதே சமயம், மத்திய அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறையை பள்ளி நிர்வாகமும், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.