1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அடுத்த ஆண்டில் 15 கோடி பேர் அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம்: உலக வங்கி எச்சரிக்கை

 கரோனா தொற்று நோய் பேரிடர் காரணமாக, அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 கோடி பேர் அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியதாவது:

கரோன தொற்று நோய், இந்த ஆண்டு கூடுதலாக 8.8 கோடி முதல் 11.5 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமை  நிலைக்குத்  தள்ளும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார சுருக்கத்தின் தீவிரத்தைப் பொருத்து, அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 15 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. உலகம் முழுவதும் 1.4 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமையில் விழக்கூடும். 

அந்த வகையில், ஏற்கெனவே அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் மேலும் பல லட்சம் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நடுத்தர வருவாய் கொண்ட பல நாடுகளில் கணிசமான மக்கள் அதிக வறுமைக் கோட்டுக்கு கீழே செல்லும் அபாயம் உள்ளது. அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படுவோரில் 82 சதவீதம் பேர், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இதில், இந்தியாவில் வறுமை நிலை குறித்த சமீபத்திய தரவுகள் இல்லை.

எனவே, வளர்ச்சி, வறுமைக் குறைப்பு ஆகியவற்றுக்கு எதிரான இந்த கடுமையான பின்னடைவை மாற்றியமைக்க வேண்டும். அதற்காக மூலதனம், தொழிலாளர்கள், திறன்கள் மற்றும் புதுமைகளை புதிய தொழில்கள் மற்றும் துறைகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அதன் மூலம் கரோனாவுக்குப் பிந்தைய வேறுபட்ட பொருளாதாரத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும்.

இந்தியாவில் மும்பை நகரின் தாராவி பகுதியில் அதிகாரிகள், மருத்துவப் பணியாளர்களின் பயனுள்ள அணுகுமுறை மற்றும் மக்களின் ஒத்துழைப்பு காரணமாக அப்பகுதியில் கரோனா தொற்று பரவல் பெருமளவில் தடுக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த மே மாதத்தில் அதிகபட்ச பாதிப்பு இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் அதாவது 3 மாதங்களில் பாதிப்பு 20 சதவீதமாகக் குறைந்தது. ஈடுபாடு மற்றும் விடாமுயற்சிக்குக் கிடைத்த பலன் அது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவியது கரோனா தொற்று. உலக அளவில் 3.5 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த் தொற்று பாதிப்பால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கரோனா தீநுண்மி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2 லட்சத்து 10,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags