அக்டோபர் 15-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் திறக்க மத்திய அரசு அறிவுறுத்தி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், கல்வி நிறுவனங்களை திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளே இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சூழ்நிலை குறித்து சென்னையில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி முடிவை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிதான் எடுப்பார். தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதை விடவும், மாணவர்களின் உயிர்தான் முக்கியம். கடந்த 7 மாதங்களாக மூடியிருக்கும் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளாட்சித் துறை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.