ஏழு புதிய கல்லுாரிகளுக்கு, பேராசிரியர்கள் உட்பட, 210 பேரை நியமிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், ஏழு புதிய கலை அறிவியல் கல்லுாரிகளை துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம்; கரூர் மாவட்டம், தரகம்பட்டி; விழுப்புரம் மாவட்டம், வானுார்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார்; நாகை மாவட்டம், குத்தாலம்; ராணிப்பேட்டை மாவட்டம், ஜம்புகுளம் ஆகிய இடங்களில், இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளும், கோவை, புலியகுளத்தில் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும் துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கல்லுாரிகளில், நடப்பாண்டில் மாணவர்களை சேர்த்து, பாடங்கள் நடத்துவதற்காக, ஒவ்வொரு கல்லுாரிக்கும் தலா, 17 உதவி பேராசிரியர்கள் மற்றும், 13 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அரசாணையை, தமிழக உயர் கல்வி துறை முதன்மை செயலர் அபூர்வா பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.