அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில், தமிழக மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா என்று மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி, தமிழக அரசும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துவது தொடர்பாக குழு அமைத்து இறுதி முடிவெடுக்க உத்தரவிட்டது.
எனினும், 50% உள் ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழக அரசும் அதிமுகவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து, தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்பது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டருக்கு உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.