1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

உடல் சூட்டைத் தணிக்க உதவும் அருமருந்து


உடல் சூட்டைத் தணிக்க உதவும் அருமருந்து


உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் பிண்ணாக்குக் கீரை நெல்லிக்காய்ச் சூரணத்தைப் பயன்படுத்தி வர நல்ல பலனளிக்கும். 

தேவையான பொருள்கள்

பிண்ணாக்குக் கீரைச் சாறு    -  300 மி.லி

நெல்லிக்காய் (கொட்டை நீக்கியது)  - 10

சீரகம்                       -      15 கிராம்   

செய்முறை

முதலில் பிண்ணாக்குக் கீரையை ஆய்ந்து எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காயில் உள்ள கொட்டையை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.

சீரகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும். அரைத்து எடுத்து வைத்துள்ள சாறுடன் நெல்லிக்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கி ஊறவைக்கவும். நன்கு ஊறின பிறகு அதனை உலர வைக்கவும். உலர்ந்த பின்பு அதனை அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் உடல் சூட்டைத் தணிக்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும் காலை மற்றும் மாலை  என இருவேளையும் தலா 2 கிராம் அளவுப் பொடியை எடுத்துச்  சாப்பிட்ட பின்பு சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.

மேற்கூறிய சூரணம்  துணை உணவாக பயன்படக்கூடியது. நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனைத் துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags