1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பூண்டை சுட்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

 பூண்டு நம் அனைவரின் சமையல் அறையிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய உண்வு பொருட்களில் ஒன்றாகும்.


பூண்டு ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு, அதிலுள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்குகிறது.


இது பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.


இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது உங்கள் சமையலில் பூண்டு விழுதை சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் நீங்கள் பூண்டை வறுத்து கூட சாப்பிடலாம்.


அது மட்டுமின்றி பச்சை பூண்டினுடைய ஊட்டச்சத்தை விட வறுத்ததில் நிறைய நன்மைகளும் ஊட்டச்சத்துக்களும் அதிகம்.


எனவே உங்கள் உணவுப்பட்டியலில் வறுத்த பூண்டை சேர்த்து கொள்ளுங்கள்.


அந்தவகையில் தற்போது வறுத்த பூண்டை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.


செய்முறை


பூண்டு தலையின் வெளிப்புற தோலை மட்டும் உரித்து எடுத்து கொள்ளுங்கள். பின்பு அதன் பூண்டு பற்களை தனித் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் சிறிது கடுகு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.


எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் பூண்டு பற்களை சேர்க்கவும்.

பிறகு அதன் மேல் உங்கள் தேவைக்கு ஏற்றார் போல் சிறிது உப்பை தூவி, அது பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுக்கவும்.


நன்மைகள் என்ன ?


பூண்டை வறுத்தெடுப்பது ஆரோக்கியமான குடலை ஒழுங்குபடுத்துவதன் மூலம் செரிமானத்தை எளிமை ஆக்குகிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் பொதுவான சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகிறது.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. மேலும் பூண்டு நச்சுகளை வெளியேற்றுவதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் பூண்டு இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags