மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:
இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. 2021 வாக்கில் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர் 15 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள் என உலக வங்கி கணித்துள்ளது. மேலும் சுமார் 7.5 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பதற்காக ஆண்டுதோறும் ரூ.1.1 லட்சம் கோடியை செலவிடுகின்றனர். நம் நாட்டு கல்லூரிகளின் பாடதிட்டத்துக்கும் வேலைவாய்ப்பு சந்தையின் தேவைக்கும் இடைவெளி உள்ளது. எனவே, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நிகராக கல்வியின் தரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய பிரதமர் மோடி விரும்புகிறார். குறிப்பாக, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் கிளையை இந்தியாவில் தொடங்கவும் அவற்றை ஒழுங்குபடுத்தவும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டி உள்ளது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.