அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் - அரசாணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
கரோனா காலத்தில் நீண்ட காலமாக மூடிக் கிடந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாள்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இயங்கிவந்தன.
தற்போது மாற்றப்பட்டு, மீண்டும் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கிவந்த அரசு அலுவலகங்கள் ஜனவரி 1 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் முழு அளவில் இயங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.