2,423 கவுரவ விரிவுரையாளர் அரசு கல்லுாரிகளுக்கு அனுமதி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் என்ற, தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் செயல்படும், 100க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நிரந்தர ஆசிரியர்கள் தவிர, மற்ற காலி இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக, கவுரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில், தற்காலிக அடிப்படையில், உதவி பேராசிரியர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, மாதம் தலா, 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் விடுமுறை காலம் தவிர மீதம் உள்ள, 11 மாதங்கள் சம்பளம் வழங்கப்படும். இந்த கல்வி ஆண்டில் மொத்தம், 3,443 காலியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, உயர்கல்வி துறையிடம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் அனுமதி கேட்டது.
இந்நிலையில், அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட, 2,423 இடங்களில் மட்டும், கவுரவவிரிவுரையாளர்களை நியமித்து கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக, ஆறு மாதங்களுக்கு, 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களில், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளின்படி, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, தமிழக உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.