1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

 

முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!




* முடி கொட்டுதல் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடுதான். அன்றாட ஆரோக்கிய மற்றும் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.



* முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை ஏற்படுதல் போன்ற தொல்லைகளுக்கு மற்றொரு முக்கியமான காரணம் பரம்பரை பிரச்சினையாகும். தந்தை வழியில் அல்லது தாய் வழியில் இந்த பிரச்சினை இருக்கும் பட்சத்தில் ஜீன் மூலம் பிள்ளைகளுக்கும் வந்து சேரும்.

 


* முடி உதிர்தலும் மன அழுத்தமும் நேரடியாக தொடர்பு கொண்டன. கவலை , அளவுக்கதிகமான யோசனை போன்ற விஷயங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பெரிய அளவு பாதிக்கும். உடலுக்குத் தேவையான தூக்கம் கிடைக்காத போதும் முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவு காணப்படும்.


 

* தேவையான அளவு சிறிய வெங்காயங்களை உரித்து வைத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த விழுதைப் பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து எடுத்து தலை மற்றும் முடிக்குப் பூசவும். இந்த வழியை மாதம் 1 முதல் 2 தடவைகள் பின்பற்றுவது நல்ல  பலனைத் தரும். 

 


* கொத்தமல்லித் தழைகளைக் கழுவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை தலையில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து விடுங்கள். பிறகு முடியினை ஷாம்பு கொண்டு நன்கு அலசவும். இதை வாரம் ஒரு முறை செய்யவும். 

 


* ஐந்து இதழ்கள் கொண்ட சிவப்பு செம்பருத்திப் பூவை பறித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் காய்ச்சி  வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதைத் தலை முடிக்குத் தினம் தேய்த்து வரத் தலைமுடி செழிப்பாக வளர தொடங்கும்.

 


* கற்றாழையில் உள்ள சதைப்பிடிப்பான பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாதிரி ஜெல் மாதிரியான வழவழப்புத் தன்மை கொண்டது. இதனைத் தலை மற்றும் மயிர்க்கால்களில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்துக் கொள்ள வேண்டும். கற்றாழை தலைமுடியின் ஈரப்பதத்தைத் தக்க  வைக்க உதவும்🔵🟣


🍃மருந்து வேண்டுவோர் 


*இலைகள் பூக்கள் வேர்பட்டை விதைகள் பசும்பால் அதிமதுரம் கோரைக்கிழங்கு எலுமிச்சை இலை நார்த்தங்காய் வேர் ஆவாரம் மரத்தின் வேர் ஆழ வேர் அரச வேர் அருகம்புல் வேர் கசாயம்

இன்னும் சில மூலிகைகள் சேர்க்கப்பட்டு 


இயற்கையான முறையில் 

பாரம்பரிய முறைப்படி 21 மூலிகைகள் சேர்த்து சூரிய புடம் வைத்து தயாரிக்கப்பட்ட சுத்தமான கூந்தல் தைலம் தயாராக உள்ளது......


சித்தர்கள் நல்லாசியுடன் இயற்கையான முறையில் சுத்தமாகவும் தரமானதாகவும் தயாரிக்கப்பட்ட கூந்தல் தைலம்


இதனை பயன்படுத்தும் முறை:


கூந்தல் தைலத்தை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தலையில் நன்கு தேய்த்து விடவும் ஒருமணிநேரம் கழித்து தலைமுடியை அரப்பு அல்லது சீயக்காய் தூள் அல்லது குளியல் பொடி இவைகளை பயன்படுத்தி நன்கு அலசி விடவும் .


வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் இவ்வாறு செய்து குழித்தால் போதுமானது ...

நிலத்தடியில் எடுக்கப்பட்ட அதிகமான உப்பு கலந்த நீரை நீரில் குளிக்கக்கூடாது.



 

தலைமுடி உதிர்தல், பேன் தொல்லை, பொடுகு ,தலையில் ஏற்படும் புண்கள், புழுவெட்டு ,இளநரை, உஷ்ணத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி, தேக எரிச்சல், பாத எரிச்சல் ,கண் எரிச்சல் மற்றும் புகைச்சல், காது மந்தம் இதுபோன்ற  பிரச்சினைகளும் தீரும் ....

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags