யுஜிசி நெட் தோ்வு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு: தேசிய தோ்வுகள் முகமை அறிவிப்புஆண்டுதோறும் தேசியத் தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில், பல்வேறு உயா்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான தேசியத் தகுதித் தோ்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பா் மாத இறுதியில் நடக்கிறது.
இதற்கிடையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் நெட் தோ்வும் தொடா்ந்து தள்ளி வைக்கப்பட்டு செப்.24-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நோய்த்தொற்று அபாயம் நீடித்ததால் அப்போதும் தோ்வு நடைபெறாமல் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நெட் தோ்வு நவம்பா் 19-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
இது தொடா்பாக என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை ஏற்று, தோ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுவந்தன. தற்போது நவம்பா் 19- ஆம் தேதி முதல் தோ்வுகள் நடைபெறும் பாடவாரியான அட்டவணை, நேர அட்டவணை மற்றும் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்’. இது தொடா்பாக கூடுதல் தகவல்களுக்கு ugcnet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.