அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்: எஞ்சியுள்ள இடங்களுக்கு விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பல்வேறு காரணங்களால் மாணவா் சோ்க்கை குறைந்ததால், எஞ்சியுள்ள இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகளுக்கு 16-ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் 27,721 போ் விண்ணப்பித்தனா்.
இதையடுத்து கல்லூரிகள் அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த செப்டம்பா் 11-ம் தேதி மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. தற்போது கலந்தாய்வில் மிக குறைந்தளவிலான இடங்களே நிரம்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தொழில்நுட்பக்கல்வி அதிகாரிகள் கூறியது: ‘கரோனா பரவலால் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நடப்பாண்டு இணையவழியில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. எனினும், வேலைவாய்ப்பின்மை, கலந்தாய்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. இதனால் மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கு 2-ஆவது சுற்று கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றனா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.