பள்ளி மாணவர்களுக்கு 4 கோடி மாத்திரைகள்
''தமிழகத்தில், பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, நான்கு கோடி, 'ஜிங்க் மற்றும் விட்டமின்' மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன,'' என, தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் கூறினார்.
தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக, 2020 மார்ச், 25 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது, மாநிலம் முழுதும் தொற்று குறைந்து வருவதால், ௧௦ மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள், வரும், 19ம் தேதி முதல் துவங்க உள்ளன.இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மாணவர்களுக்கு, மாத்திரைகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் கூறியதாவது:பள்ளி மாணவர்களிடையே, நோய் எதிர்ப்பு சக்தியை, ஆரம்பத்திலேயே அதிகரித்து, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 'ஜிங்க்' மற்றும் அனைத்து வகையான, 'விட்டமின்' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, நான்கு கோடி மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவை, அனைத்து மாணவர்களுக்கும், உரிய வழிகாட்டுதல் பின்பற்றி வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக, 2020 மார்ச், 25 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது, மாநிலம் முழுதும் தொற்று குறைந்து வருவதால், ௧௦ மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள், வரும், 19ம் தேதி முதல் துவங்க உள்ளன.இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மாணவர்களுக்கு, மாத்திரைகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் கூறியதாவது:பள்ளி மாணவர்களிடையே, நோய் எதிர்ப்பு சக்தியை, ஆரம்பத்திலேயே அதிகரித்து, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 'ஜிங்க்' மற்றும் அனைத்து வகையான, 'விட்டமின்' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, நான்கு கோடி மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவை, அனைத்து மாணவர்களுக்கும், உரிய வழிகாட்டுதல் பின்பற்றி வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.