ஈரோடு மாவட்டம் ஏழூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 98 சதவீத மாணவர்களின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்தே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளன.சூழ்நிலைக்கேற்ப மற்ற வகுப்புகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 6,029 பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. மாணவர்களுக்கு எந்தெந்த பாடத்திட்டங்கள் நடத்துவது என்பது குறித்த அட்டவணையையும் அரசு வெளியிட்டுள்ளது.
தேர்தல் தேதி முடிவுக்கு பின்னர் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். தனியார் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியதாக புகார் வந்தால், அந்தந்த பள்ளிகளிடம் அதுகுறித்து கேட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.