இந்தியாவில் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் நாட்டின் பல மாநிலங்களில் திட்டமிடப்பட்டுள்ள சட்டசபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்தி முடிக்க, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வழக்கமாக மார்ச் மாதங்களில் பள்ளிகளில் பொதுத் தேர்வு நடக்கும் சூழ்நிலையில், இந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் இதுவரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் திறக்கப்படவில்லை.
இதனால் வழக்கமாக மார்ச் மாதத்தில் நடக்கும் பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு திட்டமிட்ட வழக்கமான சமயத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்இ உள்ளிட்ட பல கல்வி வாரியங்களும் 10 மற்றும் 12’ஆம் வகுப்புகளுக்கு கால தாமதமாக தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளன.
இதனால், மாணவர்களின் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, பொதுத் தேர்தல்களை வழக்கமாக நடக்கும் ஏப்ரல்-மே மாதங்களுக்கு பதிலாக சில வாரங்கள் முக்கூட்டியே நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து சட்டசபைத் தேர்தல்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் பிப்ரவரி மத்தியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.