உதவித்தொகை தேர்வு ஜன.20 வரை அவகாசம்
எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு டிச. 28 முதல் ஜன. 8 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டை விட குறைந்த மாணவர்களே விண்ணப்பித்ததால் அதற்கான அவகாசம் வரும் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு பிப். 21ல் நடக்க உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.