பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறந்த உடன் அங்கே மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கல்வித் துறையானது அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி மாணவர்கள் தங்களுக்கான மதிய உணவு, குடிநீர் பாட்டிலை வீடுகளில் இருந்தே கொண்டு வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தாமல், Counseling தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 18-ம் தேதி முதல் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் வருகைப் பதிவுக்காக மாணவரை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் பொதுத் தேர்வு குறித்த அச்சம் தேவையில்லை எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.