தபால் துறை தேர்வை தமிழில் எழுதலாம்: மத்திய அரசு
தபால்துறையில் உள்ள கணக்காளர் வேலைக்கான தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தபால் துறையில் உள்ள கணக்காளர் வேலைக்கான தேர்வுகள் வரும் பிப்., 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றது. தமிழ் மொழி இடம்பெறவில்லை. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் மொழியில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிப்., 14ம் தேதி நடைபெற உள்ள தபால் தேர்வை ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன் தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2021 பிப்., 14 ல் தபால்துறை கணக்காளர் பதவிக்கு நடக்கும் தேர்வை,தமிழக வட்டாரத்தில் உள்ளவர்கள் தமிழில் மொழியில் எழுதலாம். தமிழக வட்டாரத்தில் உள்ளவர்கள், ஹிந்தி அல்லது ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் தேர்வை எழுதலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.