இருப்பிடத்திற்கு அருகில் தேர்தல் பணி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இருப்பிடத்திற்கு அருகில் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன், தவமணி, சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறி இருப்பதாவது: பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு உள்ளதால் அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலைபள்ளி வகுப்புகளில் கற்பிக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா காலமாக இருப்பதால், மருத்துவ காரணங்களால் இயலாதவர்கள் மற்றும் 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி விலக்கு அளிக்க வேண்டும். தேர்தல் பணி அலுவலர் நியமனத்தில் முதுநிலை ஆசிரியர்களின் பணித்தொகுதியை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய பணிகளான வாக்குச்சாவடி தலைமை அலுவலர், அதற்கு மேற்பட்ட பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தபால் வாக்குகள் முழுமையாக செலுத்தப்படும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு உரிய வசதிகளும், பிரச்னைகளை தெரிவித்து களைய ஹெல்ப் டெஸ்க்கும் அமைத்து தர வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு சென்று பணியாற்றவும் வாக்குப்பதிவு முடிந்து திரும்பவும் போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும். தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு இருப்பிடத்திற்கு அருகாமையில் பணியமர்த்தப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தபால் வாக்குகள் முழுமையாக செலுத்தப்படும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு உரிய வசதிகளும், பிரச்னைகளை தெரிவித்து களைய ஹெல்ப் டெஸ்க்கும் அமைத்து தர வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு சென்று பணியாற்றவும் வாக்குப்பதிவு முடிந்து திரும்பவும் போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும். தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு இருப்பிடத்திற்கு அருகாமையில் பணியமர்த்தப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.