பிளஸ் 2 செய்முறை தேர்வு அறிவிப்பு
பிளஸ் 2 செய்முறை தேர்வை, ஏப்ரல், 16 முதல் நடத்துமாறு, பள்ளி களுக்கு, அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், இந்த ஆண்டு பொது தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கான பொது தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' செய்யப்பட்டு உள்ளனர்.பிளஸ் 2 பொது தேர்வு, மே 3ல் துவங்க உள்ளது. இதற்கு முன், மாணவர்களுக்கு செய்முறை தேர்வை நடத்த வேண்டும்.
இந்த தேர்வு எப்போது நடக்கும் என, மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். 'தேர்தலுக்கு பின், செய்முறை தேர்வு நடத்தப்படும்' என, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டு உள்ளார்.
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடத்துவதற்கான அரசாணைகளை பின்பற்றி, பள்ளிகள் தரப்பில் தேர்வை நடத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஏப்., 8 முதல், 23ம் தேதிக்குள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதையடுத்து, ஏப்ரல் 16 முதல், 23க்குள், பொது பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர், வேறு பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய புற தேர்வு கண்காணிப்பாளர், அதே பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய, அக தேர்வு கண்காணிப்பாளர் குழுவை அமைத்து, தேர்வை நடத்த வேண்டும்.
மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை பட்டியலிட்டு, ஏப்., 24க்குள், முதன்மை கல்வி அலுவலகத்தில் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், இந்த ஆண்டு பொது தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கான பொது தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' செய்யப்பட்டு உள்ளனர்.பிளஸ் 2 பொது தேர்வு, மே 3ல் துவங்க உள்ளது. இதற்கு முன், மாணவர்களுக்கு செய்முறை தேர்வை நடத்த வேண்டும்.
இந்த தேர்வு எப்போது நடக்கும் என, மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். 'தேர்தலுக்கு பின், செய்முறை தேர்வு நடத்தப்படும்' என, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டு உள்ளார்.
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடத்துவதற்கான அரசாணைகளை பின்பற்றி, பள்ளிகள் தரப்பில் தேர்வை நடத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஏப்., 8 முதல், 23ம் தேதிக்குள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதையடுத்து, ஏப்ரல் 16 முதல், 23க்குள், பொது பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர், வேறு பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய புற தேர்வு கண்காணிப்பாளர், அதே பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய, அக தேர்வு கண்காணிப்பாளர் குழுவை அமைத்து, தேர்வை நடத்த வேண்டும்.
மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை பட்டியலிட்டு, ஏப்., 24க்குள், முதன்மை கல்வி அலுவலகத்தில் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.