1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், பித்தப்பை கற்களைக் கரைக்கவும் உதவும் அருமருந்து

கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், பித்தப்பை கற்களைக் கரைக்கவும் உதவும் அருமருந்து


இந்த சூரணம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவக்கூடிய அருமருந்தாகும். பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 




தேவையான பொருள்கள்

மிளகு            - 100 கிராம்

கீழாநெல்லி    -    250 கிராம்

செய்முறை

முதலில் கீழாநெல்லியைத் தேவையான அளவு எடுத்து ஆய்ந்து சுத்தப்படுத்தி நிழலில் உலரவைத்து எடுத்துக் கொள்ளவும். மிளகைத் தேவையான அளவு எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

உலரவைத்த கீழாநெல்லியையும் மிளகையும் தனித்தனியாக அரைத்து பொடியாக்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். கீழாநெல்லி இலை கிடைக்கவில்லையென்றால் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் பொடியை 100 கிராம் வாங்கி கலந்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களைக் கரைக்கவும் உதவக்கூடிய அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும். 21 நாள்கள் தொடரவும். பின்பு தேவையறிந்து எடுத்துக் கொள்ளவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags