அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால் அவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்தனர். அவர்களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. முதற்கட்ட மாணவர் சேர்க்கை கடந்த 4-ந்தேதி முடிவடைந்த நிலையில் இதுவரை 60 முதல் 70 சதவீத இடங்கள் வரை நிரம்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இனி வரக்கூடிய நாட்களில் மாணவர் சேர்க்கையை விரைந்து நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கல்லூரிக் கல்வி இயக்ககம் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர் சேர்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 31-ந்தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.