1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அரியர் மாணவர்கள் தேர்ச்சி: தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்

 மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்ட அரசாக திகழும் தமிழக அரசு, அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தன்னுடைய நிலையில் உறுதியாக இருக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் எம்.பி. இன்று (செப். 13) வெளியிட்ட அறிக்கை


கரோனா நோய் தொற்றின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி அரியர் வைத்து இருந்த மாணவர்கள், அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தியிருந்தால் அவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தாக தமிழக அரசு அளிவித்துள்ளது.

தமிழக அரசின் உயர்மட்டக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும், பல்வகை தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களும், முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் இறுதியாண்டை தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு பொறியியல் பட்டப்படிப்புக்கு அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பில் எந்தவிதமான விதி மீறலும் இல்லை. இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்ச்சியும் வழங்கவில்லை. அப்படியிருக்கும் போது எதிர்ப்பு தெரிவிப்பது எந்தவிதத்தில் நியாயம்.

தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறைக்கொண்ட அரசாக செயல்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்பட்ட உத்தரவை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags