ஆங்கில உரையாடல்: அதிலென்ன தவறுகள்? - மாமல்லபுரம் போவோமா!
Parasuraman – I am going Mahabalipuram this Sunday.
Sankar – Shall I come to you?
Parasuraman – Yes, you can. We will start at 7.00 a.m. in the morning.
Sankar – Why so early?
Parasuraman – Because we will visit some other places before Mahabalipuram.
Sankar – Like?
Parasuraman – Muttukkadu. Have you herd about the place?
Sankar – What special in Muttukkadu?
Parasuraman – We can enjoy a boat tripping.
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலில் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
வரும் ஞாயிற்றுக்கிழமைதான் மகாபலிபுரத்திற்குச் செல்லப் போகிறான் பரசுராமன். எனவே I am going என்பதற்குப் பதிலாக, I will be going என்று அவன் கூறி இருக்க வேண்டும்.
Shall I come to you? என்பது சரியல்ல. Shall I come with you? என்றுதான் சங்கர் கேட்க வேண்டும்.
7.00 a.m. என்றாலே அது காலையைத்தான் குறிக்கிறது. அப்படியிருக்க அதைத் தொடர்ந்து in the morning ஆகிய சொற்கள் தேவையற்றவை.
We will visit some other places before Mahabalipuram என்பதன் பிற்பகுதியை before reaching Mahabalipuram அல்லது before visiting Mahabalipuram என்று கூறி இருக்க வேண்டும்.
Herd என்பது மந்தையைக் குறிக்கும் சொல். Heard என்பதைத்தான் பரசுராமன் பயன்படுத்தி இருக்க வேண்டும். இந்த இடத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா என்பதை Have you heard about this place? எனக் கேட்கலாம்.
What special in Muttukkadu என்பது தவறு. What is special in Muttukkadu என்று அதைத் திருத்திக் கூறலாம். Tripping என்றால் தடுக்கி விழுதல். Trip என்றால் சிறு பயணம். எனவே we can enjoy a boat trip என்றுதான் கூற வேண்டுமே தவிர we can enjoy a boat tripping என்று கூறக் கூடாது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.