அரசு பணியிடங்களில் உள்ள பணியாளர்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொது இடமாறுதல் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக தற்போதைய சூழலில் பொது மாறுதல்களை நிறுத்தி வைக்குமாறு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து துறை துணைச் செயலாளர்களுக்கு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இடமாறுதல் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும் மாறுதல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.