இறந்த ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு
பள்ளிகுடாவின் சனர்புர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த மனோஜ் குமார் என்ற அறிவியல் ஆசிரியர் கடந்த மாதம் கரோனா பாதித்து உயிரிழந்தார். இவரை கைத்திபுர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
செப்டபம்பர் 11-ம் தேதி இவரது வீட்டுக்கு, பதவி உயர்வுக்கான கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.
அலிபிங்கால் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த உதவி ஆசிரியர், உடல்நலக் குறைவால் கடந்த ஜனவரி மாதமே உயிரிழந்த நிலையில், அவரையும் ஜகத்சிங்புரில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பணி உயர்வு வழங்கியுள்ளது பள்ளிக் கல்வித் துறை.
இது குறித்து கல்வித் துறையிடம் கேட்கப்பட்டபோது, இவர்கள் உயிரிழக்கும் முன்பு, பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஆசிரியர்களின் உயிரிழப்பு குறித்து தகவல் அளிக்கப்பட்டும் அது பதிவிடாமல் இருந்துள்ளது என்கிறார்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.