கூகுள் தனது பயனர்களை மோசடியான அழைப்புகளில் இருந்து பாதுகாக்க தொலைபேசி பயன்பாட்டில் சரிபார்க்கப்பட்ட அழைப்புகள் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கணினி தேடுபொறி நிறுவனமான கூகுள் தனது பயனர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் தனது தொலைபேசி பயன்பாட்டில் சரிபார்க்கப்பட்ட அழைப்புகள் என்ற புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
மோசடியான அழைப்புகளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் இந்தியா உட்பட அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வெளிவருகின்றன.
‘சரிபார்க்கப்பட்ட அழைப்புகள்’ மூலம் அழைப்பவரின் பெயர், புகைப்படம், அழைப்பின் காரணம் மற்றும் கூகுள் அங்கீகரிக்கப்பட்டதைக் குறிக்கும் சரிபார்ப்பு சின்னம் ஆகியவை இடம் பெறும்.
"இது ஒரு பாதுகாப்பு நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சரிபார்ப்பிற்குப் பிறகு எந்தத் தகவலையும் கூகிள் சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ செய்யாது." என்று அந்நிறுவனம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷனின் (எஃப்.டி.சி) 2019 ஆம் ஆண்டின் அறிக்கையில், மோசடி செய்பவர்களால் மக்களைத் தொடர்பு கொள்வதில் தொலைபேசி அழைப்புகள் முதன்மையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.