முதன்மைக்கல்வி அலுவலர் கூட்ட அறிவுரைகள்.
1. மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு விளம்பர பேனர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் வைக்கவேண்டும்.
2. தலைமையாசிரியர் கட்டாயம் அனைத்து வேலை நாட்களிலும் பள்ளியில் இருக்கவேண்டும்..
3. மற்ற ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்கு கற்பித்தல் சார்ந்த செய்முறைகள் தயார் செய்தல் , பள்ளி பதிவேடுகள், EMIS பணிகள், அரசு நலத்திட்டங்கள் சார்ந்த பணிகள் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
4. கடந்த ஆண்டைவிட குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
5. மாணவர் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள பள்ளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
6. EMIS ல் Student promotion 100% முடிக்கவேண்டும்.
7. மாணவர் சேர்க்கைக்காக எந்த சான்றையும் கட்டாயப்படுத்தக்கூடாது.
8. விலையில்லா பொருட்கள் ஏதும் பள்ளியில் கூடுதலாக இருக்கக்கூடாது.
8. தற்போது பருவ மழை தொடங்க உள்ளதால் பள்ளி கட்டடங்கள் மற்றும் வளாகங்கள் பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்தவேண்டும்.
இதில் முழு கவனம் செலுத்தி அனைவரும் செயல்படவேண்டும் . என அறிவுறுத்தப்பட்டது.
எனவே அனைத்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி எந்த புகாருக்கும் இடமளிக்காமல் சிறப்பாக செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
*மாவட்டக் கல்வி அலுவலர்,*
*இராணிப்பேட்டை.*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.