1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஊட்டச்சத்து நிறைந்த சத்துமாவு எப்படி செய்வது? , அதன் மருத்துவ பயன்கள்

 


ஊட்டச்சத்து நிறைந்த ஆச்சி சத்துமாவு பற்றியும், அதன் மருத்துவ பயன்கள் பற்றியும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியமான வாழ்விற்கு நம் உடலை நல்ல முறையில் பேணி பாதுகாப்பது மிகவும் அவசியம். அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம்.  ஒருவகையில் கொரோனா நெருக்கடி காலமும் அதைத்தான் நமக்கு கற்று கொடுத்திருக்கிறது. 

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், சத்தான உணவுகளை சீராக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் நிறைய சத்துக்கள் ஒரே உணவில் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று சொல்வோமா? அந்த வகையில் நமக்கு நினைவுக்கு வருவது, சத்துமாவுதான். 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொதுவான உணவு இது. அந்த காலத்தில் நமது முன்னோர்கள் இதனை வீட்டிலேயே தயாரித்து பயன்படுதினர். ஆனால் தற்போதைய அவசர உலகில் இதற்கான போதிய நேரம் கிடைப்பதில்லை. இனி சத்தான உணவுக்காக நீங்கள் சிரமப்பட தேவையில்லை. சத்துமாவு எப்படி செய்வது? நேரம் கிடைக்குமா? என சிந்திக்க தேவையில்லை. 

உங்கள் பாரம்பரிய ஆச்சி நிறுவனம் உங்களுக்காக Aachi Health Mix (ஆச்சி சத்து மாவு) அறிமுகம் செய்திருக்கிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இதனை வாங்கி குடும்பத்தினருடன் ரசித்து ருசித்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டியதுதான்.

அனைத்து வகையான சத்துக்களும் உள்ள இந்த மாவு 200 கிராம் ரூ.140 விலையிலும், 500 கிராம் ரூ.250 விலையிலும் கிடைக்கிறது. சூப்பர் ஆஃபராக ஹெல்த் மிக்ஸ் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். ஆன்லைனிலும் இதனை நீங்கள் ஆர்டர் செய்து பெறலாம். 

 ஆச்சி சத்துமாவில் உள்ள பொருட்கள்:

கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், கோதுமை, முழு பச்சைப்பயிறு, சோயாபீன், நிலக்கடலை, முந்திரி, பாதாம், ஜவ்வரிசி, ஏலக்காய், புழுங்கலரிசி. 

தயாரிப்பு முறை:

ஒரு டம்ளர் பால் (200 மி.லி) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆச்சி சத்துமாவு கலந்து, சூடுபடுத்தி கட்டி எதுவும் இல்லாதவாறு கிளறிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு தேவையான சர்க்கரை சேர்த்து சூடாக பரிமாறவும். இல்லையென்றால் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆச்சி சத்துமாவு கலந்து கொள்ளுங்கள். இதனை நன்றாக கொதிக்க வைத்து, அதன்பிறகு மோர், உப்பு சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறவும். உங்களுக்கு பிடித்த வகையில் நீங்கள் அதனை தயாரித்து சாப்பிடலாம்.

ஆச்சி சத்து மாவு- பயன்கள்:

கம்பு வகையில் அதிக அளவில் இரும்புச்சத்து, புரதம், கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. ரத்தசோகை உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட இரும்புச்சத்து அவசியம். உடல் சூட்டை தணிக்க, ரத்த அழுத்தம், மலச்சிக்கல் தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.

கேழ்வரகு:

 இதில் அதிக அளவில் கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு இதனால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு கேழ்வரகு நல்லது. இதில் வைட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன. உடலின் தேவையற்ற கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை சமன்செய்யவும் கேழ்வரகு பயன்படுகிறது.

சோளம்:

இதில் அதிக அளவிலான மாவுச்சத்து, கொழுப்பு, புரதம் உள்ளதால் சத்தான உணவாக திகழ்கிறது. உடலுக்கு தேவையான உறுதியை அளிக்கும். வயிற்றுப்புண், உடலில் தேவையற்ற கொழுப்பை அகற்றுவதற்கும் சோளம் அவசியம்.

புழுங்கலரிசி:

இது எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய அரிசி. அதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் நல்லது. 

மக்காச்சோளம்:

இதில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளன. இது உடலுக்கு தேவையான வலிமை மற்றும் ஆற்றலைக் கொடுக்கும். உடலில் உள்ள உப்பை குறைக்கும் தன்மையும் மக்காச்சோளத்திற்கு உண்டு. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

கோதுமை:

இதில் செலினியம் என்ற சத்து காணப்படுகிறது. இது சரும பராமரிப்பிற்கு நல்லது. தோல் சுருக்கங்கள், முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கான சத்தான உணவாக இது இருக்கிறது. பெண்களுக்கும் இது பலவகையான நன்மைகளை தரக் கூடியது.

பச்சை பயிறு:

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. ரத்த அழுத்ததை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் கட்டாயமாக பச்சை பயிறு எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகை பிரச்சனையை குறைக்கும். 

சோயாபீன்:

இதில் புரதங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கொழுப்பு அளவைக் குறைப்பதன் மூலம் உங்கள் இதயத்தை பராமரிக்க உதவுகிறது. உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அதிக உடல் எடை, செரிமானக் கோளாறு பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

நிலக்கடலை:

இதில் அதிக புரதம், வைட்டமின்கள், கொழுப்புச் சத்து நிறைந்துள்ளன. உங்கள் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் இதன் மூலம் கிடைக்கும். பற்கள், எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் உதவுகிறது.

பாதாம், முந்திரி:

உடலின் சீரான வளர்ச்சிக்கு இது உதவும். எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு இவை பயன்படுகிறது. முந்திரியில் உள்ள தாதுக்கள் ரத்த நாளங்களுக்கு நல்லது. பாதாம் ரத்தத்தின் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது. ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும்.

ஜவ்வரிசி:

இதில் கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மிக எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளில் இதுவும் ஒன்று. இயற்கையான முறையில் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு, சரியான தீர்வாக ஜவ்வரிசி இருக்கும். மூட்டுவலி பிரச்சனையில் இருந்து விடுபட ஜவ்வரிசி உதவும்.

ஏலக்காய்:

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. சுவாச கோளாறுகளை சரி செய்யவும் ஏலக்காய் உதவுகிறது. ஜலதோஷம், இருமல், சளி பிரச்சனைகளுக்கும் ஏலக்காய் தீர்வாக அமையும். பசியின்மையை குறைக்கவும் இது நல்ல பலனை தரும். 

இப்படி ஏராளமான சத்து நிறைந்த தானியங்கள் ஆச்சி சத்து மாவில் உள்ளது. அதனால் கண்டிப்பாக அதனை வாங்கி சாப்பிட்டு உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags