1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஞ்சி வந்த ராஜ்தானி விரைவு ரயில்: காரணம் இதுதான்!

 

புது தில்லியில் இருந்து ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜ்தானி விரைவு ரயில் இன்று காலை ராஞ்சி வந்தடைந்தது. 

டோரி சந்திப்பில் டானா அமைப்பினர் நடத்திய  போராட்டம் காரணமாக ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாமல், மாற்றுப்பாதையில் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை ராஞ்சியை அடைந்தது.

வியாழக்கிழமை புது தில்லியில் இருந்து புறப்பட்ட விரைவு ரயில், டால்டோன்கஞ்ச் பகுதியில் நடந்த போராட்டத்தால், ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாமல், பாதி வழியில் நின்றது. அதில் இருந்த 930 பயணிகளும் பேருந்து மூலம் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், ஒரே ஒரு பெண் பயணி அனன்யா, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்த மாற்றுப் போக்குவரத்தை ஏற்க மறுத்து, ரயிலிலேயே செல்வேன் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

ரயில் பயணத்துக்குக் கட்டணம் செலுத்திவிட்டு, பேருந்தில் பயணிக்க அவர் விரும்பவில்லை. இதனால், ரயில் அதிகாரிகள் இறுதியாக, சட்டக் கல்லூரி மாணவியான அனன்யாவை ரயிலில் கோமோ மற்றும் பொகாரோ வழியாக 535 கிலோ மீட்டர் பயணித்து ராஞ்சிக்கு அனுப்பி வைத்தனர். இது வழக்கமான பாதையை விட 225 கி.மீ. தொலைவாகும்.

இது குறித்து அனன்யா கூறுகையில், என்னை பேருந்து அல்லது டேக்ஸி மூலம் ராஞ்சி செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். ஆனால், நான் ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறேன். ஏன் பேருந்தில் செல்ல வேண்டும் என்று கேட்டேன். இறுதியாக இந்திய ரயில்வேயின் சுட்டுரைப் பக்கத்தில் இது பற்றி நான் தெரிவித்ததும், ராஞ்சிக்கு ரயிலில் வந்தடைந்தேன் என்கிறார்.

டோரி சந்திப்பில் நடந்த போராட்டத்தால் மேற்கொண்டு ரயிலை இயக்க முடியாததால், மாவட்ட நிர்வாகமே பேருந்து வசதியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பயணியும் அவர்கள் செல்லுமிடத்தை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வேயின் கடமை. அதனால்தான் பேருந்தில் செல்ல மறுத்த பெண்ணை மாற்றுப் பாதையில் ரயிலில் ராஞ்சிக்கு அனுப்பி வைத்தோம். சுமார் 15 மணி நேரம் தாமதமாக ராஜ்தானி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.45க்கு ராஞ்சி சென்றடைந்தது என்கிறார் ரயில்வே அதிகாரி.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags