6 மாத காலத்துக்குப் பின் மீண்டும் பள்ளிகளை திறக்கும் தேதியை முடிவு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன்
அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை
மேற்கொண்டார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத்
திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில்,
ஆன்லைன் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று
வருகின்றன. இதனிடையே, வரும் 21-ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து பாடம்
எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில்
மீண்டும் பள்ளிகளை எப்போது திறப்பது? என்பது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.சென்னை தலைமைச் செயலகத்தில்
நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை
செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் சிஜி தாமஸ்
வைத்யன், இயக்குநர்கள் கண்ணப்பன், உஷா ராணி,
பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனையில், பள்ளிகளைத் திறக்கும் தேதி மற்றும்
வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்திருப்பதாகவும், தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை
முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதாகவும்
தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடன், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்படும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.